மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் மாவட்ட செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட One Gov system தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டு இந்த முறையினால் பொதுமக்களின் சேவைகளைத் திறம்பட செயற்படுத்துவது தொடர்பான தெளிவூட்டல்களை பெற்றுக்கொண்டனர்.
அதன் இரண்டாம் கட்டமாக One Gov முறையை அமுல்படுத்தும் செயல்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதற்கான தெளிவூட்டல் கருத்தரங்காக குறித்த நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










