வடக்கு புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வடக்கு புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (09.04.2026) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான புகையிரதம் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் புகையிரதம் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி புகையிரதம் நாளை (10.04.2026) முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

“டித்வா” புயல் காரணமாக வடக்கு புகையிரதப் பாதையின் 14 இடங்கள் சேதமடைந்திருந்தன.

அந்த இடங்கள் தற்காலிகமாக சீர்செய்யப்பட்ட பின், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில புகையிரதங்கள் மட்டும் இயக்கப்பட்டன. 

இந்த நிலையில் , ஜனவரி 19 ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது சேதமடைந்த 14 இடங்களும் நிரந்தரமாக புனரமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects