‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Free Trade Zone Manufactures Association (FTZMA) 5 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை Free Trade Zone Manufactures Association தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ, 09.04.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் Free Trade Zone Manufactures Association செயலாளர் M. H. Z. M. மர்சூக், செயற்குழு உறுப்பினர்களான சாந்தனி ஏக்கநாயக்க மற்றும் லலித் கஹடபிட்டிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










