தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர், ஜனாதிபதி அலுவலக பணியாளர்கள் புத்தாண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலக பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர், ஜனாதிபதி அலுவலக பணியாளர்கள் புத்தாண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, 16.04.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர், பணியாளர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களுடன் சுமூகமாக உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கடந்த ஆண்டின் தவறுகள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்த்து, புதிதாக சிந்தித்து புதிய மனப்பாங்குகளுடன் முன்னேறிச் செல்வதற்குப் புத்தாண்டுப் பிறப்பு ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டின் பிரதான அரச நிறுவனம் என்ற வகையில் ஜனாதிபதி அலுவலகம் கடந்த ஆண்டில் ஆற்றிய பணிகளை மீளாய்வு செய்து, அந்த அனுபவங்களுடன் புத்தாண்டில் திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், இதுவரை ஆற்றிய பணிகளுக்காக பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி,ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான கபில ஜனக பண்டார, ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects