ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன் பிரகாரம் மே மாதம் 3 ஆம் திகதி நாட்டை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் மே 5 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்டச் சந்திப்புகளில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி முய்சுவின் இந்தப் பயணத்தின் போது, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கைச்சாதிடபட்படவுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










