முதன்முறையாக தூதருக்கு இணையான நிலைமையுடைய பிரதிநிதி ஒருவர் பாலஸ்தீனுக்கு நியமிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் இருந்து தூதருக்கு இணையான நிலைமையுடைய பிரதிநிதி ஒருவர் பாலஸ்தீனுக்கு முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எம்.ஃபௌசரை பாலஸ்தீனில் இலங்கையின் பிரதிநிதியாக நியமித்ததுடன், 04.05.2026 அன்று அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஃபௌசர் இடையே நட்புறவான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

இலங்கை எப்போதும் பாலஸ்தீனின் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளது என்பதையும், தமது பதவிக்காலத்தில் இலங்கை அரசின் நிலைப்பாட்டிற்கு இணங்க பாலஸ்தீனில் பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்க்கிறேன் என்பதையும் ஃபௌசர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் நீண்டகாலமாக இலங்கை பாலஸ்தீன் ஒற்றுமைக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இக் கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர் விஜித ஹேரத், ஃபௌசர் தமது கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் எம். ஃபௌசர் 04.5.2026 அன்று இரவு தமது கடமைகளைத் ஆரம்பிப்பதாக இலங்கையில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects