கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000 க்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தாமதமின்றி உடனடியாகத் தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன உறுதியளித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அதிபர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை சில தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, கூடிய விரைவில் பரீட்சையை நடத்தி உரிய நியமனங்களை வழங்கத் தேர்வுகள் திணைக்களம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
தகுதியானவர்களைத் தாமதமின்றி உடனடியாகத் தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவே அதிபர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பரீட்சையை விரைவில் நடத்துவதற்கும், உரிய நியமனங்களை வழங்குவதற்கும் தேர்வுகள் திணைக்களம் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










