இலங்கைக்கும் பெலாரஸ்க்கும் இடையே சுகாதாரத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்த்து!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மற்றும்குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான மருத்துவக் கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்சாண்டர் கஜாயேவை (Alexander Khajayev) சந்தித்துள்ளதுடன், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இதற்கிடையில், மின்ஸ்க் நகரில் அமைந்துள்ள பெலாரஸ் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் விஜித ஹேரத் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார். அங்கு அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் விட்டெப்ஸ்க், க்ரோட்னோ மற்றும் கோமல் ஆகிய மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது 3,000க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் அங்கு மருத்துவக் கல்வி கற்று வருவதாகவும், இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான கல்விப் பங்களிப்பை பிரதிபலிக்கிறது என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects