பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றைக் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (05.06.2026) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (06.06.2026) பிற்பகல் 3.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பிரகாரம், நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதேபோல், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










