நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 2,604 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்த நோயாளர்களில் அதிகளவானோர், அதாவது 52.50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 32,054 ஆகும்.

அதேபோல், தென் மாகாணத்தில் 9,674 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,237 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 4,823 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,979 நோயாளர்களும், வடமேல் மாகாணத்தில் 2,778 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் 1,550 நோயாளர்களும், வடமத்திய மாகாணத்தில் 1,013 நோயாளர்களும், வட மாகாணத்தில் 957 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 12,445 ஆகும்.

அதேபோல், கம்பஹா மாவட்டத்தில் 12,282 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,428 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 4,092 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 3,802 நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3,588 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 3,501 நோயாளர்களும், கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தில் 2,557 நோயாளர்களும், அம்பாந்தோட்டையில் 1,745 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 1,649 நோயாளர்களும், குருணாகலில் 1,629 நோயாளர்களும், மட்டக்களப்பில் 1,220 நோயாளர்களும், புத்தளத்தில் 1,149 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கல்முனைப் பகுதியில் 784 நோயாளர்களும், மொனராகலையில் 776 நோயாளர்களும், பதுளையில் 774 நோயாளர்களும், யாழ்ப்பாணத்தில் 708 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, களுத்துறை சுகாதார அறிவியல் நிறுவன அதிகாரப் பிரதேசத்தில் 678 நோயாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 656 நோயாளர்களும், திருகோணமலையில் 563 நோயாளர்களும், அனுராதபுரத்தில் 531 நோயாளர்களும், பொலன்னறுவையில் 482 நோயாளர்களும், அம்பாறையில் 412 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 365 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் வவுனியா (94), மன்னார் (64), கிளிநொச்சி (56) மற்றும் முல்லைத்தீவு (35) ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.

புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் உள்ள 142 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects