“WSIS Forum 2026” மாநாட்டில் இலங்கையின் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச கவனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Pal expo வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற “WSIS Forum 2026” மாநாட்டில் இலங்கையின் டிஜிட்டல் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

டிஜிட்டல் சந்தைக்கான நிர்வாகத் தேவைகளை நடைமுறையில் செயல்படுத்துதல் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த அமர்வில் உரையாற்றிய பணிப்பாளர் நாயகம், இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொருளாதார உத்தி 2030 மூலம் எதிர்பார்க்கப்படும் நம்பகமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் பொருளாதாரக் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக TRCSL நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குமுறை சீர்திருத்தங்களின் வரிசையை சர்வதேச பிரதிநிதிகள் மத்தியில் விளக்கினார்.

குறிப்பாக, நவீன டிஜிட்டல் சந்தையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் நுகர்வோர் பாதுகாப்பைப் பேணுவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதற்காக TRCSL அறிமுகப்படுத்தியுள்ள வானொலி அதிர்வெண் ஏல விதிகள் மூலம் வெளிப்படைத்தன்மையும் முதலீட்டாளர் நம்பிக்கையும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உள்கட்டமைப்புகளைப் பகிர்ந்து பயன்படுத்துவதற்கான விதிகள் மூலம் செலவினங்களைக் குறைத்து, கிராமப்புற மற்றும் போதிய சேவைகளைப் பெறாத பகுதிகளுக்கு தகவல் தொடர்பு இணைப்புகளை வேகமாக விரிவுபடுத்த முடிந்துள்ளதாகவும், பரந்த பிராந்திய சேவைத் தர விதிகள் மூலம் சேவை வழங்குநர்களின் பொறுப்புக்கூறல் மற்றும் பயனர் அனுபவங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்காக மிகவும் வலுவான சிம் கார்டு பதிவு கட்டமைப்பைச் செயல்படுத்துவதாகத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், உரிம முறையை நவீனமயமாக்குவதன் மூலம் தகவல் தொடர்பு சேவைகள், உள்கட்டமைப்புகள் மற்றும் கேபிள் மையங்களுக்கான தெளிவான வகைப்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புதிய முதலீட்டு மாதிரிகளுக்கான பரந்த வாய்ப்புகள் திறக்கப்படுவதாகவும் கூறினார்.

டிஜிட்டல் மாற்றம் என்பது வெறும் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு வலுவான நிறுவன அடித்தளம் மற்றும் நிலையான வழிமுறையின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டிய ஹேரத், இலங்கை GSR-26 சர்வதேச நிர்வாகக் கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைச் செயல்களாக மாற்றியுள்ளது எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects