இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவராவார்.
இவர் 2013 ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உப-தயாரிப்பு தொழில்முனைவோராகவும் மதிப்பீடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான சுரன்ஜித் வேவிட்ட, உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உட்பட பல துறைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவராவார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களினால் 17.08.2026 அன்று தனது பதவியை இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







