புகையிரதம் தடம் புரண்டமையினால் வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த புகையிரதமே பொதுஹெர கையிரத நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர புகையிரத நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து புகையிரதங்களும் தாமதமாகவே பயணிக்கும் என புகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








