வடக்கு புகையிரத மார்க்கத்தின் கடவைகளைப் பயன்படுத்துவோர்க்கான அறிவித்தல்!

Tamil
 – 
ta

வடக்கு புகையிரத மார்க்கத்தின் கடவைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனத் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அநுராதபுரம் ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந் நிலையில் , வடக்கிற்கான தொடருந்து சேவையை இன்று (28) முதல் வழமை போல முன்னெடுப்பதற்குத் புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரதம் காலை 5:45க்கு புறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வடக்கு புகையிரத மார்க்கத்தில் உள்ள சில கடவைகளில் இதுவரை பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமையால் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனத் புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், சமிக்ஞைகள் தொடர்பான சிக்கல் நிலை தொடருவதாக புகையிரத சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects