இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ 16.01.2025 பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
இராணுவ தளபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். புதிய இராணுவ தளபதிக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அத்தோடு 26 வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வைஸ் எட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பும்16.1.2025 அன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய கடற்படை தளபதிக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










