சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்கள் பாதிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

3,037 குடும்பங்களைச் சேர்ந்த 10,031 பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 9 இடைத்தங்கல் முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை , மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து இன்று (21.01.2025) காலை 7 மணி முதல் மீண்டும் இடம்பெறுவதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு , பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டிய – கல்லேல்லவுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects