வானில் இந்த ஆண்டு கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு நிகழ உள்ளது.
இது மிகவும் அரிதானதாக நிகழும் காட்சி என்பதால் பலரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள் சூரியனின் நேர்கோட்டில் இருந்தன.
ஆனால் தற்போது அவற்றுடன் இரண்டு கிரகங்கள் இணைந்து 6 ஆகக் காட்சியளிக்கின்றன.
இன்று ஏழாவது கிரகமும் இவற்றின் நேர்கோட்டில் இணையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் வெள்ளி , செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களில் அடங்குகின்றன.
இக் காட்சியை வெற்றுக் கண்ணால் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவற்றில் ஐந்து கோள்களை மாலை 6:30 முதல் 7:10 வரையான காலப் பகுதியில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிகழ்வு இனி 2040 ஆம் ஆண்டில் நிகழும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










