எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் சந்தையில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களின் விற்பனையை தடுக்கவும், சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகள் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முக்கிய மொத்த விற்பனை கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










