மட்டக்களப்பில் காலநிலை மாற்றம் தொடர்பான அனர்த்த முன்னாயத்த பயிற்சி செயலமர்வு!

Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்வு கூறலின் அடிப்படையில் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி செயலமர்வு 03.04.2025 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மாவட்ட செயலகம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து UNFPA மற்றும் அவுஸ்ரேலியன் அயிட் நிறுவனங்களின் நிதி அனுசரணையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

காலநிலை மாற்றத்தினால் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மாவட்டத்தில் அனர்த்தங்களினால் அதிகளவு பாதிக்கப்படும் பிரதேச செயலகங்களான மண்முனை மேற்கு, கோறளைப்பற்று தெற்கு, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப பரீட்சார்த்த நடவடிக்கையினை முன்னெடுக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தரவுகளின் அடிப்படையில் அனர்த்த பாதிப்பை குறைப்பதற்கு முன்கூட்டியே மக்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், UNFPA அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects