ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் நாளை 6 ஆம் திகதி மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










