பரீட்சை திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே இன்று (08.05.2025) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி வந்த H.J.M.C.A. ஜெயசுந்தரவின் பதவிக்காலம் 06.05.2025 அன்றுடன் நிறைவு பெற்றது.
அவர் தற்போது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாவார்.
வெற்றிடமான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










