மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச காணி சம்பந்தமான நடமாடும் சேவை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கிராம சேவகர் பிரிவு ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், மாங்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவின் அரச காணி சம்பந்தமான நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில் காணி பிரிவு உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.
இதன் போது அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் ஆராயப்பட்டு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










