இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் நன்மையடையும் வாகன இறக்குமதி துறையினர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர்.

இதற்கமைய தற்போது எச்சரிக்கையுடன் இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதனால் இந்த தொழில்துறையின் முக்கிய பிரிவுகளில் படிப்படியாக மீண்டும் செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சர்வதேச ரீதியாக முன்னணியில் உள்ள வாகன உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் இறக்குமதி தளர்த்தப்பட்டமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள போதிலும், வாகனச் சந்தை நுட்பமான கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாகனச் சந்தை நுட்பமான மீட்சி கட்டத்தில் உள்ளதனால், அவதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதிக இறக்குமதி வரிகள், வெளிநாட்டு நாணயத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகுமுறை மற்றும் ஸ்திரமான நீண்டகால கொள்கைகளின் அவசியத் தன்மை போன்ற காரணிகள் தொழில்துறையின் வளர்ச்சியைப் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects