சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் சகல துறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணிக்காக இதுவரை 149 ஒருநாள் போட்டிகளில் மேக்ஸ்வெல் விளையாடியுள்ளார்.
மேலும் 2012ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர், 149 போட்டிகளில் 3990 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும், 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்காக அணிக்காக உலகக் கிண்ண தொடரில் விளையாடியிருந்ததுடன், அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருந்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










