நாட்டிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் 74,570 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் இந்தியாவிலிருந்து 22,000 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,158  சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 4,789 சுற்றுலாப் பயணிகளும்,  பங்களாதேஷிலிருந்து 4,515 சுற்றுலாப் பயணிகளும்,  அவுஸ்திரேலியாவிலிருந்து 3,577 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 3,526 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில்,  இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 11 இலட்சத்து 04 ஆயிரத்து 373 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects