மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது ஆண்டு 01.07.2025 அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் பாடசாலை அதிபர் கு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலையின் எண்பதாவது ஆண்டு விழாவும், விக்னேஸ்வரா நடைபவனியும் இம் மாதம் 05.07.2025 அன்று நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










