“பிரஜாசக்தி” தேசிய நிகழ்ச்சித் திட்டம் பற்றி ஊடக பிரதானிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சமூகத்தை வலுவூட்டுவதற்கும், சமூகத்திற்குள் பொருளாதார நன்மைகள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயல்படுத்தப்படும் “பிரஜாசக்தி” (சமூக சக்தி) தேசிய வேலைத்திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்தவும், அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார தலைமையில் 30.06.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் செயலமர்வொன்று நடைபெற்றது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் படி, சமூகத்தை வலுவூட்டுவதற்கான பன்முக அணுகுமுறையுடன் கூடிய வேலைத்திட்டமாக ”பிரஜாசக்தி” (சமூக சக்தி) தேசிய வேலைத்திட்டம், எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது, இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒவ்வொரு 06 பேரில் ஒருவர், பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 95.3% பேர் கிராமப்புறங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
இந்நிலை தொடர்வது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயல்முறையை பாதிப்பதோடு, சமூக வலுவூட்டல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து, முறையான சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்படுவது இதன் கீழ் செயற்படுத்தப்படுகிறது.

பல்வேறு அரசாங்கங்களின் கீழ் இந்நாட்டில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதை மாத்திரம் இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களாக உள்ளதோடு, அதற்கு பதிலாக, சமூக வலுவூட்டல் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஊடாக “பிரஜாசக்தி” திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இதன் சிறப்பம்சமாகும்.

இந்நாட்டின் வறுமையை ஒழிப்பதில் அதிகூடிய பங்களிப்பைச் செய்த கல்வித்துறை, வறுமை ஒழிப்புக்கான அணுகுமுறையாக இது வரை முறைப்படி அங்கீகரிக்கப்படாததால், இத்தகைய மூலோபாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாக்கப்பட உள்ளது. வறுமையில் தாக்கம் செலுத்தும் சுகாதாரம், போக்குவரத்து, உணவு பாதுகாப்பு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இப் புதிய அணுகுமுறையின் மூலம் சமூக வலுவூட்டல் பொறிமுறையை நடைமுறைப்படுத்த மூன்று புதிய கட்டமைப்பு மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. தேசிய மட்டத்தில், ஜனாதிபதியின் தலைமையில் “பிரஜாசக்தி” தேசிய கொள்கைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், 09 அமைச்சர்கள் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

புதிய கட்டமைப்பு மாற்றங்களின் ஊடாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே தேசிய கொள்கைப் பேரவையின் நோக்கமாகும். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே இதன் தலைவராகச் செயற்படுகிறார்.

கொள்கை சபையின் முடிவுகளை செயல்படுத்த அமைச்சரின் தலைமையில் ஒரு பிரஜாசக்தி தேசிய வழிகாட்டுதல் குழு நிறுவப்பட்டுள்ளது. அதில் 9 அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபை பிரதம செயலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஜனாதிபதியின் சிரேஸ்ட செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) குழுவின் செயலாளராகவும், அழைப்பாளராகவும் செயல்படுகிறார்.

பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் ஊடாக தேசிய மட்டம் வரை இந்த தேசிய திட்டத்தை ஒருங்கிணைக்க கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் ஒரு சமூக அபிவிருத்திச் சபைகள் நிறுவப்படும். இந்தக் குழுவின் தலைவர் பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவரால் நியமிக்கப்படுவார், மேலும் பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்ட ஒரு அதிகாரி செயலாளராக நியமிக்கப்படுவார்.

சமூக வலுவூட்டல் பணிக்கு உதவும் அபிவிருத்தி முடிவுகளை எடுக்கவும் குறிப்பாக சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய மக்களை அடையாளம் காண இந்த சபை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, நிபுணர்கள், தொழில்முனைவோர், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு நியமிக்கப்படும்.

இந்த செயலமர்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, தற்போதைய அரசாங்கம் அதன் கொள்கை அறிக்கையின்படி “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்குவதற்கு மூன்று முக்கிய திட்டங்களை முன்மொழிந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக குறுகிய கால பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் நன்மைகளை நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமாக விநியோகித்து அதன் மூலம் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் “பிரஜாசக்தி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, வசதியான, பாதுகாப்பான, செல்வந்த மற்றும் நிலையான நாடு என்பது பிரஜைகள் வாழும் சமூக சூழலில் கட்டாயமானவை என்று ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார். அத்தகைய நாட்டை உருவாக்குவதற்கான மூலோபாய திட்டங்களைத் தயாரிப்பதில் மேற்கண்ட இரண்டு திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு வளமான நாட்டை உருவாக்க அல்லது வாழ்க்கைச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த செயற்பட்டு வரும் அதே வேளையில், ஒரு அழகான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பு, அதாவது, அவர்களின் வாழ்க்கையையும் சுற்றியுள்ள சூழலையும் சமூக ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தும் பங்கு, பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்காக, அரசாங்கம் “Clean Sri Lanka” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது அவர்களுக்கு ஒரு சரியான, மரியாதைக்குரிய, நவீன மற்றும் பெருமைமிக்க வாழ்க்கையை உருவாக்க உதவும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டாரவும் இந்நிகழ்வில் உரையாற்றினார். மேலும் அரசாங்கத்திற்கும் பிரஜைகளுக்கும் இடையில் ஒரு சமாந்தரமான நிகழ்ச்சி நிரலை உருவாக்க ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உட்பட அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects