இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ள தேசிய விபத்து தடுப்பு வாரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இந்த தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று (07.07.2025) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படவுள்ளது.

ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 8 ஆம் திகதி பணியிட விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 9 ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 10 ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்துக்களை தடுப்பதற்காகவும், ஜூலை 11 ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் விபத்துகளைத் தடுப்பதற்கான நாளாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு இடங்களை ஆய்வு செய்தல் மற்றும் எதிர்காலத்தில் விபத்து அபாயத்தைக் குறைக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர் வைத்திய சிகிச்சை தேவைப்படும் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

அதாவது, ஒவ்வொரு நிமிடமும் குறைந்தது 6-8 இலங்கையர்கள் வைத்திய சிகிச்சை தேவைப்படும் விபத்திற்கு முகம் கொடுப்பதாக சுட்டிகாட்டிய சுகாதார அமைச்சு, அன்றாட வாழ்வில் ஏற்படும் விபத்துகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​ஒவ்வொரு இலங்கையரும் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு விபத்திற்கு ஏனும் முகம் கொடுக்கலாம் என்று கூறியுள்ளது.

திடீர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வயதுடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 15-44 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவான விபத்துக்களுக்கு முகம் கொடுப்பதுடன், விபத்துகளும் இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

திடீர் விபத்துகள் காரணமாக சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகளில் ஆண்டுதோறும் 2,500-3,000 பேர் இறக்கின்றனர் என்றும், விபத்துகளால் ஏற்படும் இறப்புகள், வைத்தியசாலைகளில் இடம்பெறும் இறப்புக்களில் 10வது முக்கிய காரணம் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 145,000 இறப்புகளில், 10,000-12,000 பேர் விபத்துகளால் இறக்கின்றனர் என்று தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, இது ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 பேர் என்றும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் குறைந்தது 4 பேர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் விபத்துகளால் ஏற்படும் 7,500-8,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் வைத்தியசாலைகளுக்கு செல்லும் முன்பே நிகழ்கின்றன என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் உள்ள அரசு வைத்தியசாலைகளால் தற்போது பராமரிக்கப்படும் தேசிய விபத்து கண்காணிப்பு அமைப்பின்படி, அரசு வைத்தியசாலைகளில் உள்நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் கீழே விழும் காயங்களுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்ட சுகாதார அமைச்சு, வாகன விபத்துகளில் 15%, விலங்கு கடித்தல், உடலில் விழும் பல்வேறு பொருட்கள், வேண்டுமென்றே அல்லது தற்செயலாக ஏற்படும் தனிப்பட்ட தாக்குதல்கள், வெட்டுக்கள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவற்றால், முறையே 15%, 14%, 11% மற்றும் 8% அரசு வைத்தியசாலைகளில் உள்நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வேண்டுமென்றே ஏற்படும் விபத்துகளும் முக்கிய பங்கு வகிப்பதுடன், ஆண்டுதோறும் தற்கொலைகள் காரணமாக 3,000க்கும் மேற்பட்ட உயிர்கள் இழக்கப்படுவதுடன், நீரில் மூழ்குதல், பல்வேறு பொருட்கள் விஷமாகுதல், விலங்கு கடித்தல், விலங்கு தாக்குதல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்படுகின்றன என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects