மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் விநியோக பொறிமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், சில மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், நாட்டில் மீண்டும் இதுபோன்றதொரு நிலைமை ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்குத் தேவையான நீண்டகால திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், மருத்துவமனைகளுக்கு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நிதி ஏற்கனவே திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










