இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன் அடிப்படியில், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பினை தொடர விரும்பும் விண்ணப்பதாரிகள் க.பொ.த உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் சித்தி பெற்றிருக்கவேண்டியது அவசியமாகும். இலங்கை பிரஜைகளுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில்கள் 2025-2026 கல்வி ஆண்டுக்கானது.

ஆயுர்வேதம் – பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கை நெறி வரை

யுனானி பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கை நெறி வரை

ஹோமியோபதி பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு

சித்த பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு

அதேவேளை, யோகாவில் B.Sc மற்றும் B.A (யோக சாஸ்த்ர) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் க.பொ.த உயர்தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் முதுகலை படிப்புகளை நாடுபவர்கள், மத்திய இந்திய மருத்துவ கவுன்சிலால் (CCIM) அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆயுர்வேதம் மற்றும் யுனானியில் முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், CCIM ஆல் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய இளங்கலை பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc (யோகா) மற்றும் முனைவர் பட்ட (யோகா) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள், முறையே ஏதேனும் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை ICCR A2A தளம் ஊடாக a2ascholarships.iccr.gov.in எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவேற்றம் செய்யவும்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவினை 0112421605, 0112422788, 0112422789 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், edu.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் தொடர்புகொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு, ஆர்வமுள்ள வேட்பாளர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை 011-2421605, 011-2422788, 011-2422789 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது eduwing.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects