மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரனுக்கும், மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த விசேட சந்திப் பின்போது மாவட்டத்தில் ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளின் போதும் நோயுற்றுள்ள பொதுமக்களை அவசரமாக கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கும் விமானப்படையின் ஒத்துழைப்பு அவசியமானது என்பதை மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டிய வேளை, அவ்வாறான திடீர் அனர்த்த நிலமைகளின் போது தமது பூரண ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் தாம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன கடந்த மாதம் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்று கடமையேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










