மட்/ கொக்கட்டிச்சோலை இ. கி.மி வித்தியாலயத்தில் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகளானது மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் வளவாளர் அ.கருணாகரன் தலைமையில் 02.08.2025 நடைபெற்றது.
மாணவர்களிடையே நீரை சேமிப்போம் சுற்றுச்சூழலை காப்போம் எனும் தொணிப்பொருளில் தரம் 1 முதல் 7 வரையான மாணவர்களுக்கான போட்டிகள் இடம் பெற்றன.
நிகழ்வில் மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் (HRTC) மற்றும் SIP Abacus நிறுவனத்தின் அனுசரனையில் சிறார்களிடையே நீரை சேமிப்போம் சுற்றுச்சூழலை காப்போம் எனும் விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் இடம்பெற்றன.
இப் போட்டிகளில் அதிகமான சிறார்கள் ஆர்வத்துடன் ஓவியங்களை வரைந்ததுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










