அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றப் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகள் சுகாதார அமைச்சினால் தீர்க்கப்படாவிட்டால், நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 11 ஆம் திகதி காலை 8 மணிக்குள் திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளதாக, சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்தார்.
மேலும், சுகாதார அமைச்சுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்ட போதும் இடமாற்றப் பட்டியலில் உள்ள சிக்கல்கள் குறித்து எந்த அர்த்தமுள்ள தலையீடும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமது சங்கம் எழுப்பிய கவலைகளைச் சுகாதார அதிகாரிகள் புறக்கணிப்பதாகவும் தொழிற்சங்கத்தின் மத்தியக் குழு பணிப்புறக்கணிப்பை கடைசி முயற்சியாக ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இந் நிலையில் எதிர்வரும் நாட்களில் தீர்வு எட்டப்படாவிட்டால், முன்மொழியப்பட்ட பணிப்புறக்கணிப்பு நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










