முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ‘ செயல்முறை முகாமைத்துவம்’ பயிற்சி கருத்தரங்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கு தயார்படுத்தும் முகமாக மாவட்ட செயலக அலுவலக முறைமைகளை மேம்படுத்தும் நோக்கில் “செயல் முறை முகாமைத்துவம் (Process Management) எனும் தலைப்பிலான பயிற்சி கருத்தரங்கானது 12.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியின் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு வேலை விபரணம் (Job Description ), வேலைக் கையேடு (Work Manual ), செயன் முறைக் கையேடு (Process Manual ), வேலை வழிமுறைகள் (Work Instruction) மற்றும் படிவங்கள் பதிவேடுகள் (Forms and Records ) போன்ற விடயங்களினை நடைமுறை உதாரணங்களுடன் விரிவாக தெளிவு படுத்தியிருந்தார்.

இப் பயிற்சி கருத்தரங்கில் மேலதிக மாவட்ட செயலாளர்கள் உட்பட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects