இலங்கை சுற்றுலாத்துறையை முன்னேற்ற இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் எடுத்துள்ள தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் இலங்கை வருகையை ஊக்குவிக்கும் வகையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு முக்கிய சமூக ஊடக பிரபலங்களை இலங்கைக்கு அழைத்துவர இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் தீர்மானித்துள்ளது.

இக் குழு இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 1 ஆம் திகதி வரை நாட்டில் சுற்றுப்பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த விளம்பர முயற்சி, உள்ளடக்கம் சார்ந்த சந்தைப்படுத்தல் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிகிரியா, தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் தலதா மாளிகை போன்ற கலாசார அடையாளங்கள் முதல் எல்ல தொடருந்து பயணம், யால தேசிய பூங்கா, பாசிக்குடா கடற்கரை, காலி கோட்டை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தாமரை கோபுரம் போன்ற நவீன மேம்பாடுகள் உள்ளிட்ட இயற்கை மற்றும் வனவிலங்கு சிறப்பம்சங்கள் வரை பார்வையிடவுள்ளனர்.

இப் பயணத் திட்டம் பாரம்பரியம், வனவிலங்குகள், கடற்கரை மற்றும் நகர்ப்புற அனுபவங்களை ஒன்றிணைத்து, இலங்கையின் சுற்றுலா ஈர்ப்பின் ஒவ்வொரு அம்சமும் உண்மையாகக் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.

வருகை தரும் செல்வாக்கு குழுவில், ஆஷ்லே பார்க்கர், ஷெரிடின் ஃபிஷர், செரிஸ் லில்லி, எல்லா டெல்னோர் ஆகிய முக்கிய சமூக ஊடக பிரபலங்கள் உள்ளடங்குவர்.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகளின் இந்த முயற்சி, தங்கள் பயணத் தேர்வுகளில் நம்பகத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையைத் தேடும் இளைய, அனுபவம் சார்ந்த பயணிகளைச் சென்றடைவதற்கான ஒரு இலக்கு சந்தைப்படுத்தல் முயற்சி என்று வலியுறுத்துகின்றனர்.

அவுஸ்திரேலியா, இலங்கைக்கான வளர்ந்து வரும் மற்றும் மதிப்புமிக்க சுற்றுலா மூல சந்தையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இந்த பிரச்சாரம், குறிப்பாக வரவிருக்கும் கோடை காலத்தில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects