நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில்,
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் புதிய செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 10,934 அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையில், புதிய அட்டைகள் சேர்க்கப்பட்டதன் மூலம், ஜூன் மாத இறுதியில் நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 2,075,744 ஆக அதிகரித்துள்ளது.
மே மாத இறுதியில் இது 2,064,810 ஆக இருந்தது, இது 0.52 வீத அதிகரிப்பாகும்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை, 3.36 வீதம் அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










