2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 166,000 ஐ தாண்டியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், இம் மாதம் இதுவரை 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் 38,456 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
இதே வேளை, பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15,305,054 ஆகும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










