கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

159 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாளை (03.09.2025) பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக கொழும்பு போக்குவரத்துப் பிரிவினால் விசேட போக்குவரத்துத் ஒழுங்கு திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள தும்முல்ல சந்திப்பிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரை ஹேவ்லாக் வீதியில் பயணிக்கவிருப்போர் பின்வரும் அறிவுறுத்தலை பின்பற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்திற்கு எதிரே உள்ள கொழும்பின் வெளியேறும் வீதியில் நிறுவப்பட்ட பஸ் நிறுத்தம் நாளை (03.09.2025) பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 07.00 மணி வரை ஹேவ்லாக் மார்க்கத்தில் உள்ள பொன்சேகா வீதியின் சந்தியில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும்.

மேலும் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் தும்முல்ல சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரையான ஹேவ்லாக் வீதியில் கனரக வாகனப் போக்குவரத்து (கொள்கலன் ஊர்திகள் மற்றும் டிப்பர் லொறிகள்) நாளை (03.09.2025) பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects