இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று (17.09.2025) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது அவர்களின் “வேலைக்கு ஏற்ற ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் என மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றாததால், இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்ததாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக, மின்சார சபையின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அத்தோடு, புதிய மின் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளில் தாமதம் ஏற்படலாம்.
இந் நிலை, அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நிலவும் முரண்பாடடை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










