உலக குடிசன தின பிரதான நிகழ்வை எதிர்வரும் அக்டோபர் 05 ஆம் திகதி அலரி மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 29.09.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின், உலக குடிசன தினம் அக்டோபர் மாதம் 05 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
“நகர்ப்புற நெருக்கடியின் மீது கவனம் செலுத்துங்கள்” எனும் கருப்பொருள் இந்த ஆண்டுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் குடிசன மற்றும் குடியிருப்புகளை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த ஆண்டு குடிசன தினத்தை “நமக்கென்று ஒரு இடம் – ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என அமைச்சர் மேலும் கூறினார்.
குடியிருப்பு தினத்துடன் இணைந்து, ஒக்டோபர் 01 முதல் 05 வரை தேசிய குடியேற்ற வாரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
அக்டோபர் 01- தேசிய தொடக்க விழா
அக்டோபர் 02- குடியேற்ற கலாசார தினம்
அக்டோபர் 03 – குடியேற்ற மற்றும் இளைஞர் தினம்
அக்டோபர் 04 – சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பு தினம் (அயலவர் நற்புறவு)
அக்டோபர் 05 – குடியேற்ற உரையாடல், கண்காட்சி மற்றும் நிறைவு விழா


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










