151 ஆவது உலக தபால் தினம் இன்று (09.10.2025) உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, இந் நாட்டில் தபால் சேவை 227 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
உலகளாவிய தபால் ஒன்றியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படி, உலகின் 193 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 9 ஆம் திகதியினை உலக தபால் தினமாக கொண்டாடுகின்றன.
1874 ஆம் ஆண்டு, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி யுனிவர்சல் போஸ்டல் யூனியன் என்ற அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, அதன்படி, அந்த நாள் 1969 இல் உலக தபால் தினம் என்று பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கையில் 56 ஆவது தேசிய தபால் தின நிகழ்வு இன்று (09.10.2025) பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், டாக்டர் அனில் ஜாசிங்க, பிரதான தபால் அதிபர் ருவன் சத்குமார, துணை தபால் அதிபர் மற்றும் தொழில் துறை தரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தபால் துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










