நுவரெலியாவில் ஆரம்பமாகியுள்ள வசந்தகால கொண்டாட்டங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வசந்தகால கொண்டாட்டமானது கடந்த 06.04.2026 அன்று ஆரம்பமாகியிருந்த நிலையில் இம் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக நுவரெலியா மாகாண சபையின் முதல்வர் உப்பாளி வனிகசேகர தெரிவித்தார்.

இந்நிலையில் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கொண்டாட்ட நாட்களில் ஹெலிக்கொப்டர் சவாரி, படகு சவாரி, மலர் கண்காட்சி போன்ற களியாட்ட நிகழ்வுகள் போன்றன நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects