மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அமைதிப்பேரணி ஒன்று 03.10.2025 அன்று முன்னெடுக்கப்பட்டது.
“அன்புடன் காப்போம் – உலகை வெல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருடம் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு ACBM தலைமையில், சந்திவெளி பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் இடம்பெற்றது.
நிகழ்வில் சிறுவர்கள், சிறுவர்களுடைய பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










