உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்ற பிரதமருக்கு வரவேற்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிரதமர் ஹரினி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் புது டில்லியை சென்றடைந்துள்ளார். 

அவர் பிரதமராக பதவியேற்று இந்தியாவுக்கான முதல் விஜயமாக இது அமைந்துள்ளது. 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து இன்று (16.10.2025) அதிகாலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார். 

இந்நிலையில் புது டில்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மஹிசினி கொலொன்னே உள்ளிட்ட குழுவினர் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்றனர். 

இன்று முதல் இம் மாதம் 18 ஆம் திகதிவரை பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதமர் தனது விஜயத்தின் போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். 

இதே வேளை ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects