24ஆயிரம் மில்லியனை தாண்டிய இலங்கை சுங்க வரி வருவாய் இலங்கை சுங்கத்தின் 15.10.2025 அன்றைய வரி வருவாய் ரூ.24,918 மில்லியனை பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கை சுங்கம் ஒரே நாளில் அதிகபட்ச வரி வருவாயை பதிவு செய்துள்ளதாக இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 15.10.2025 அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட வரி வருவாயானது ரூபாய். 2,47 பில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூபாய்.1,867 டிரில்லியனாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் சுங்கத்தின் வருடாந்த இலக்கான ரூபாய். 2,115 டிரில்லியனை எட்டும் வகையில் முன்னேற்றப் பாதையில் செல்வதாக இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










