முதல் ஆறு மாதங்களில் மின்சார சபை ஈட்டிய வருவாய் தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய் 38.8 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக 2025 ஆம் நிதி ஆண்டின் நடு ஆண்டு நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மின்சார விற்பனையிலிருந்து பெற்றுக்கொண்ட வருவயாக 192.6 பில்லியன் ரூபாய் பதிவாகியுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விற்பனையிலிருந்து பெற்றுக்கொண்ட வருவாய் கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 314.4 பில்லியன் ரூபாயாக உள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சாரத்திற்கான தேவை 4.3 சதவீதம் அதிகரித்து 7,814 GWh (ஜிகாவோட்) ஆக உயர்ந்த போதிலும், 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 7,491 GWh ஆக இருந்தது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மின்சார சபையின் நேரடி உற்பத்தி செலவு 8.7 சதவீதம் குறைந்து ரூ. 144.3 பில்லியனாக இருந்தது.

இது 2024 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் ரூ. 158.1 பில்லியனாக இருந்தது.

இது முக்கியமாக சாதகமான வானிலை காரணமாக வெப்ப உற்பத்தியை நம்பியிருப்பதைக் குறைத்தது.

2025 ஆம் ஆண்டில் சராசரி மின் கட்டணங்கள் குறைக்கப்பட்டதன் காரணமாக, உற்பத்தி செலவு குறைந்த போதிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மின்சார சபை ரூ. 11.2 பில்லியன் மொத்த இழப்பைப் பதிவு செய்தது.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார சபை ரூ. 13.2 பில்லியன் நிகர இழப்பைப் பதிவு செய்தது.

இது 2024 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ. 119.2 பில்லியன் நிகர இலாபத்திற்கு எதிராக இருந்தது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects