2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் மூலம் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்திற்கான சுற்றுலா வருவாய் 186.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 2,533.7 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயுடன் ஒப்பிடும்போது 4.9% அதிகரிப்பைக் காட்டுகின்றன.
இதற்கிடையில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) அண்மைய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் நவம்பர் 12 வரை நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957 ஆகும்.
இந்தியாவிலிருந்து 443,622 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 180,592 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 144,308 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 123,053 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் சீனாவிலிருந்து 115,400 சுற்றுலாப் பயணிகளும் வருகைதந்துள்ளனர்.
நவம்பர் 1 முதல் 12 வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,270 என்பது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










