இலங்கை தபால் திணைக்களத்தில் 36 தபால் சாரதி (திறந்த) பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (18.11.2025) பிற்பகல் 2.00 மணிக்கு நாரஹேன்பிட்டி அரசாங்க செய்தித் துறை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
தரம் III தபால் சாரதி (திறந்த) பதவிகளுக்கான 40 வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 1500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இலங்கை தபால் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றிருந்தது. இதனடிப்படையில் மேலும் விண்ணப்பதாரர்கள் செய்முறைப் பரீட்சை மற்றும் பொது நேர்முகத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனடிப்படையில் தகுதிகளை முறையாக பூர்த்தி செய்த 36 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த புதிய தபால் சாரதிகளுக்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். மேலும் 19, 20 ஆகிய இரு தினங்களில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டதன் பின் தபால் போக்குவரத்துத் சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அஞ்சல் துறையின் கீழ் சுமார் 129 அஞ்சல் சாரதிகள் பணியாற்றுகின்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










