ஆறாவது தவணை கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்குள் – சர்வதேச நாணய நிதியம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையாக, சுமார் 350 மில்லியன் டொலர் நிதியை இலங்கை இரண்டு வாரங்களுக்குள் விரைவான அணுகலைப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 

நிதியமைச்சில் 03.12.2025 அன்று நடைபெற்ற உயர்மட்ட நன்கொடையாளர் மன்றத்தின் போது சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

சமீபத்திய டித்வா சூறாவளியின் பின்விளைவுகளை மதிப்பிடுவதற்கும், தேசிய நிவாரணம், மீட்பு மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்கு உதவியை ஒருங்கிணைப்பதற்காகவும் நிதியமைச்சு 03.12.2025 அன்று உயர்மட்ட நன்கொடையாளர் மன்றத்தை நடத்தியது. 

இதில் இராஜதந்திரப் பணிகள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் சர்வதேச கடன்களை வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. 

இந்தக் கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க அபிவிருத்திப் பங்காளர்கள் தங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்போது, சூறாவளியால் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட விரிவான சேதங்கள் குறித்தும் அவசர கால பதிலிலிருந்து பரந்த, நீண்டகால மீட்பு கட்டமைப்புக்கு மாறுவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தையும் திறைசேரி செயலாளர் வலியுறுத்தினார். 

இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளர்களிடமிருந்து அபிவிருத்தி உதவிகள், குறிப்பாக உணவுப் பொருட்கள், மானியங்கள், சலுகைக் கடன்கள் மற்றும் குறுகிய மற்றும் நடுத்தர கால உதவிகள் போன்ற விரைவான மனிதாபிமான ஆதரவு உடனடியாகத் தேவை என்று அவர் வலியுறுத்தினார். 

பொருளாதாரத் துறைகள் சுருங்குவதாலும் உள்நாட்டுக் கடன்களுக்கான வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளாலும் ஏற்படும் தடைகளைச் சுட்டிக்காட்டி, வெளிநாட்டு நிதி ஆதரவின் முக்கியத்துவத்தை மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்துரைத்தார். 

இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியை விரைவுபடுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects