மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் இன்று (17.12.2025) ஆய்வுகளை மேற்கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்கு நப்லஸ் பல்கலைக்கழக பேராசிரியர் லூயி டி சர்நோ அடங்கலான ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஆய்வுகளை மேற்கொண்டது.
இதன் போது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய உபகணங்கள் மூலம் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்க உள்ளனர்
இந் நிகழ்வில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ ஜீஒரீஅநோ, பௌலோ புற்றிநோ, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஏ.எம். சி.ரி.அத்தநாயக்க, பிரதம பொறியியலாளர் எஸ்.கலாதரன், கிழக்கு மாகாண பாலங்கள் பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறியியலாளர் எம்.ஏ.வாதுலன், கிழக்கு மாகாண பாலங்கள் வடிவமைப்பு பொறியியலாளர் கே.வில்வராசன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலங்கள் பராமரிப்பு நிர்வாக பொறியாளர் ரீ.ராமச்சந்திரன், மாவட்ட அனர்த்த நிவார சேவை உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










